Tuesday, 14 February 2017

தலையாட்டிகள்

நீ பேசும் போதெல்லாம்
தலையாட்டி பொம்மையாகின்றோம்
நானும் உன் கம்மலும்!

நடுக்கம்

அடுத்த முறையேனும்,
நிறுத்திவிட வேண்டும்,
அவள் பார்த்ததும்
எச்சில் விழுங்குவதை!

பிரசவம்

உன் நினைவின் வலிகள்!
மெது மெதுவாய் பிரசவித்திருந்தது!
மூன்று நான்கு கவிதைகள்.

கெஞ்சல்

கெஞ்சித்தான் கேட்கிறேன்!
கொஞ்சம் காதல் தந்து
பஞ்சம் தீர்த்துவை!
என் கவிதைகளின்!

நிறவெறி

கவிஞர்களின் நிறவெறி
கேட்பாரற்று கிடக்கும்
'அமாவாசை நிலவு'