Monday, 22 December 2014

நெற்றிப்பொட்டு

எதுகை மோனை
எல்லாம் சேர்த்து
தினம்,
அவளே கைப்பட‌ தீட்டும்
அழகிய ஹைக்கூ கவிதை
-அவளின் "ரெட்டை" நெற்றிப்பொட்டு


இனிப்பின் சுவை


எந்த தின்பண்டங்களிலும்
இருப்பதேயில்லை 
இனிப்பின் சுவை..!
அவளின் அந்த‌,
இருட்டு இதழ் முத்ததிற்க்கு பிறகு...!


Tuesday, 4 November 2014

கடவுள்

என் கடவுள், அவனுக்குச் சாத்தானாகவும்,
அவன் கடவுள், எனக்குச் சாத்தானாகவும்,
மதத்தினால் மாறிப்போக...!
நாங்களும் மாறி மாறி அலைகிறோம்,
கடவுளாகவும்..!
சாத்தானாகவும்..!

Monday, 27 October 2014

மழை



கடலில் பிறந்து,
காற்றில் கலந்து,
கரையை கடந்து,
காலம் உணர்ந்து,
மலையில் ஏறி,
மனதை உருக்கி,
மண்ணை நனைக்கிறது,
இந்த மழை...!

இது எதுவுமேயில்லாமல்,
எப்படி நனைக்கிறாய்...!
என்னை நீ..!

தீப ஒளி திருநாள்

ஒவ்வொரு வேட்டுச்சத்தமும்,
உசுப்புகிறது என்னை,
உன் நினைவுகளிலிருந்து..!

உன் வாசனை

கார்மேகம் புடை சூழும்,
கடற்கரையாய் காற்றடிக்கும்,
மரங்கள் மகிழ்ச்சியாய் ஆடும்,
பறவைகள் பறந்து பாடும்,
மலர்கள் மழையென பொழியும்,
மழைத்துளி மலரென  தூவும்,
இடையில் ஓர் வாசனை,
என் உயிரை குடிக்கும்,
ஆம்,
இது  மண்வாசனை அல்ல..!
உன் வாசனைதான்..!

உன் வாசனை

சந்தனத்தின் வாசனை கர்வம்,
சல்லி சல்லியாய் நொருங்கியது..!
நெற்றியில் நீ வைத்ததால்..!
   

பட்டாசு



பட்டாசு பற்றவைத்துவிட்டு,
ஓட்டம் எடுக்கிறாய் நீ..
வெடித்து சிதறுகிறது,
என் இதயம்..

காதல் மழை



மழைத்துளிகள் மொய்ப்பதாய்
உன் மான்விழிகள்
என்னை மொய்க்க
உடல் நனையாமல்
உள்ளம் மட்டும் நனைகிறது
  

   -“காதல் மழை"

காதலின் கரு



கதிர்வீச்சு,
கருவினை கலைக்குமாம்...!
உன் கண்களின் கதிர்வீச்சோ,
என்னை கருவுறச்செய்திருக்கிறது..!
நம் காதலினை...!

Friday, 10 October 2014

"எனது இரவுகள்"

நட்ட நடு இரவில்
விழித்து கொள்கிறேன்,
எழுந்து, எவரும் அறியாமல்
வெளிவருகிறேன்,

ஆடை துவைக்கும் கல்லில்
அமைதியாய் அமர்கிறேன்,

முதல் உன் நினைவுடன்
உறவாடுகிறேன்,
பின் நிலவுடன்
உறையாடுகிறேன்,

பின்
நிலா, நீ, நான் என
நிமிடங்களை நகர்த்துகிறேன்,

அந்த நிலவொளியில் நான்,
நினைவிழந்தவனாய்,
நிறைய சிரிப்புகளுடன்..!

அடுத்த வீட்டுக்காரனோ அதிர்ச்சியில்..!
அரைகிறுக்கனோ என..?

நிலவுக்கு சில நாட்கள்
விடுப்பு உண்டு,
உன் நினைவுக்கோ..!
ஓர் நாளும் இல்லை,

இப்படியாய் எனது இரவுகள்,
தனிமையை சாகடித்து,
தன்னை சாந்தபடுத்தி கொள்கின்றன..

                                         - மு.துரை


Tuesday, 9 September 2014

கோவில்

இருக்கிறதா இல்லையா
என்பதற்க்கு
இதுதான் தொடக்கம்

இல்லை என்போருக்கு
செல்லுமிடமெல்லாம் பிரச்சினை
இருக்கு என்போருக்கோ
இடம்தான் இங்கே பிரச்சினை

பணம் கடவுளாய் மாறிப்போன
இவ்வுலகில்
கடவுளும் பணமாக தயங்கவில்லை

எல்லோர் வீட்டிலும்
இறைவனுக்கு இடமிருக்கையில்
இறைவன் வீட்டிலோ
இருப்பவனுக்குத்தான் இடமிருக்கிறது

இருக்கிறவனுக்கு கிட்டப் பார்வை
இல்லாதவனுக்கு எட்டப் பார்வை

பிச்சைகாரனுக்கு சில்லரை சத்தம்
பூணூல்களுக்கு கட்டுகள் மொத்தம்

மனிதன் உள் நுழைகிறான்
தன் நிலமையை சாந்தபடுத்த
கடவுள் வெளிவருகிறார்
ஊர் நிலமையை கலவரப்படுத்த

எல்லாம் இருப்பவனுக்காய் இருந்தாலும்
இல்லாதவனுக்காய் இருக்கிறது
ஏழைகளின் திருமண் மண்டபமாய்
-இந்த கோவில்

Tuesday, 24 June 2014

கவிதை

விலகிய சேலை,
இழுத்து போர்த்தியபடி
- அவள்
விலகாத கண்கள்,
இமைத்து பார்த்தபடி
- நான்
 
 

கவிதை

ஆடைகள் விலகியே,
அவள்,
அழுக்குத் துணி துவைக்கிறாள்...
அழுக்கேறுவதோ
என் மனதில்..!

Wednesday, 26 March 2014

கவிதை

ஒருமுறை,
சர்க்கரை இருக்கிறதா என,
நீ குடித்து பார்த்து கொடுத்த,
தேநீரை,
குடித்ததிலிருந்து..!
சர்க்கரை இருந்தாலும்,
நீ, குடித்து பார்த்து கொடு,
என்கிறேன்,
தினமும் நான்..!


கவிதை

நீ..,
கொண்டு வந்து கொடுத்த,
கோப்பை தேநீரை,
குடித்துவிட்டு கேட்டேன்,
யார் கலந்தது
தேன் என்றே..?
நீயோ..!
நான் தான்,
சர்க்கரை இருக்கிறதா என,
குடித்து பார்த்தேன்
என்கிறாய்,
குழந்தையாக...!



சிவகாமி

நீ,
என் அம்மாவை,
பெறவில்லை என்றாலும்,
"என் அம்மாயீ"
ஆகிப் போனாய்,
உன் அன்பினாலே...!

போதும் நில் என்றே,
எல்லோரும்,
என்னை பொறுக்கச் சொன்னார்கள்
வாசலிலே,

நீதான் அழைத்தாய்...!

போதும் வாடா என்றே
உன் பூஜை அறை
வரையினிலே...!

எல்லோர்
வீட்டுக்குள்ளும்,
என் காற்றுக்கே
தடை இருக்கையில்,

என் கால்களையும்,
தடை செய்யாத ஒருத்தி,
நீதானே..!

கோழியும் திங்காத
ஒர் உணவினை,
கொட்டிச் செல்வார்கள் எல்லோரும்,
கோடு கோடாய்
கிழிந்த இலையிலே,

நீயோ,
கோழிக் குழம்பையும்,
எனக்களிப்பாய்,
உன் கோணல் விழாத
புது தட்டினிலே..!

நீதான் எரிகிறாய்,
என தெரியாமல்,
நடு நிசியில் ,
நான் கடந்து வந்தேன்
சுடுகாட்டை..?

சுற்றத்தார் சொன்னதும்,
சுறுங்கிய இதயம்,
விரியவில்லையே,
சில நொடிகள்..!

எங்கே சொல்லுவேன்..?
எனக்கிறுந்த ஒரே சொந்தமும்
எரிந்து போனதே,
அந்த தீயிலென்று...?

என் பெயர்,
யார் சொல்லியும்,
அவ்வளவு இனிமையாயில்லை,

நீ சொல்லும்,
அந்த,
மூத்தர பாண்டிக்கு(மு.துரை பாண்டியன்)
இனையாக...!

ஒருமுறை வந்து
சொல்லிப்போ
எனக்காக...!

இரு நூறு வீடுல்ல,
அந்த ஊரில்,
இதுவரை நான் நுழைந்தது
இரண்டே சமையலறையே..?

ஒன்று என் வீடு,
மற்றொன்று
உன் வீடு,
மன்னிக்கவும்
நம் வீடு...!

Tuesday, 18 March 2014

கவிதை

கொசு ஒன்று 
உன்னை 
கடித்துக் கொண்டிருக்கிறது...?
ஆம்,
தேனீயாக
மாறிக் கொண்டுதான்
இருக்கிறது...!


கவிதை

எனக்கு அவள் இமையும்,
அவளுக்கு என் இமையும்,
ஒரே ஒரு
உடையாகிப்போக‌ ,
உரித்திட துணிந்தோம்
அவைகளையும்....!

கவிதை

எனக்கும் அவளுக்கும்
பயங்கர போட்டி,
கடுகளவு தூரத்தில் நின்று,
கார்பன் டை ஆக்சைடை,
யார் அதிகம்
உறிஞ்சுவது என்றே...!
  -இதழ் முத்தம்