Thursday, 9 November 2017

தேநீர்

அவள் கொடுத்த தேநீரில்,
அப்படி எதுவுமே இல்லை,
அருமை! என கூறவைக்கும்,
அந்த ரசாயனம் தவிர்த்து!!

நினைவுகள்

என் இதயம் நிரப்பி,
வழியும் உன் நினைவுகள்,
பிடித்து சேகரி்க்கிறேன்
கவிதைகளென!!

சவபெட்டி

அவளுக்காய் ஓர்,
அற்புதமான கவிதை,
எழுதி,
படித்து,
மடித்து,
சேமித்து வைக்கிறேன்,
அதற்கான சவபெட்டியில்

அனிச்சைசெயல்

அனிச்சைசெயல்களில்,
அவளது கொலுசோசையையும்
சேர்த்து விடுகிறது,
இந்த காதல்..!
எனையறியாது
திரும்பியபடி நான்!!