துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Monday, 27 October 2014
மழை
கடலில் பிறந்து,
காற்றில் கலந்து,
கரையை கடந்து,
காலம் உணர்ந்து,
மலையில் ஏறி,
மனதை உருக்கி,
மண்ணை நனைக்கிறது,
இந்த மழை...!
இது எதுவுமேயில்லாமல்,
எப்படி நனைக்கிறாய்...!
என்னை நீ..!
தீப ஒளி திருநாள்
ஒவ்வொரு வேட்டுச்சத்தமும்,
உசுப்புகிறது என்னை,
உன் நினைவுகளிலிருந்து..!
உன் வாசனை
கார்மேகம் புடை சூழும்,
கடற்கரையாய் காற்றடிக்கும்,
மரங்கள் மகிழ்ச்சியாய் ஆடும்,
பறவைகள் பறந்து பாடும்,
மலர்கள் மழையென பொழியும்,
மழைத்துளி மலரென தூவும்,
இடையில் ஓர் வாசனை,
என் உயிரை குடிக்கும்,
ஆம்,
இது மண்வாசனை அல்ல..!
உன் வாசனைதான்..!
உன் வாசனை
சந்தனத்தின் வாசனை கர்வம்,
சல்லி சல்லியாய் நொருங்கியது..!
நெற்றியில் நீ வைத்ததால்..!
பட்டாசு
பட்டாசு பற்றவைத்துவிட்டு,
ஓட்டம் எடுக்கிறாய் நீ..
வெடித்து சிதறுகிறது,
என் இதயம்..
காதல் மழை
மழைத்துளிகள் மொய்ப்பதாய்
உன் மான்விழிகள்
என்னை மொய்க்க
உடல் நனையாமல்
உள்ளம் மட்டும் நனைகிறது
-“காதல் மழை"
காதலின் கரு
கதிர்வீச்சு,
கருவினை கலைக்குமாம்...!
உன் கண்களின் கதிர்வீச்சோ,
என்னை கருவுறச்செய்திருக்கிறது..!
நம் காதலினை...!
Friday, 10 October 2014
"எனது இரவுகள்"
நட்ட நடு இரவில்
விழித்து கொள்கிறேன்,
எழுந்து, எவரும் அறியாமல்
வெளிவருகிறேன்,
ஆடை துவைக்கும் கல்லில்
அமைதியாய் அமர்கிறேன்,
முதல் உன் நினைவுடன்
உறவாடுகிறேன்,
பின் நிலவுடன்
உறையாடுகிறேன்,
பின்
நிலா, நீ, நான் என
நிமிடங்களை நகர்த்துகிறேன்,
அந்த நிலவொளியில் நான்,
நினைவிழந்தவனாய்,
நிறைய சிரிப்புகளுடன்..!
அடுத்த வீட்டுக்காரனோ அதிர்ச்சியில்..!
அரைகிறுக்கனோ என..?
நிலவுக்கு சில நாட்கள்
விடுப்பு உண்டு,
உன் நினைவுக்கோ..!
ஓர் நாளும் இல்லை,
இப்படியாய் எனது இரவுகள்,
தனிமையை சாகடித்து,
தன்னை சாந்தபடுத்தி கொள்கின்றன..
- மு.துரை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)