Thursday, 18 October 2012

புதிய பாரதம்

எத்தனை எத்தனை
உயிர்கள் மாய்ந்தனவோ..
அன்னியர்களை விரட்டி
அடிமை தலையை உடைக்க..
இவ்வீர மண்ணில்...

அத்தனையும் வீண் ஆனதே...
வாக்குரிமையை நிறைவேற்ற
நீர் வாங்கும் அந்த
வாயில்லா பிசாசினால்

காசினை வாங்கி காரியம் செய்கிறாய்
கயவன் வென்றவுடன்
காண்பதையெல்லாம் திருடுகிறான்

உண்மையாய் போட்டிருந்தால்..
உலக்கையால் அடித்து
கேட்டிருக்கலாம்
நியாயத்தை...

அறிந்தும் அறியாதவனாய்
தெரிந்தும் தெரியாதவனாய்
விலகுகிறோம்...
அவனை....
வாங்கி விட்டோமே என்று...


பாஞ்சாலியை பறிகொடுத்த
பாண்டவர்களாய்
விலகி நிற்க்கிறோம்
பாரத தாயை பறிகொடுத்து...

அரசியல் என்னும்
அநியாய சாக்கடையில்
அமுக்கி விட்டோம்
அத்தனை உயிர்களின்
தியாகத்தை...

விழித்து எழுவோம்
இனிமேலாவது..

தலை நிமிர்வோம்..
தலை குனியச் செய்யும்
காசினை வேண்டாம் என்று...

சாக்கடை அரசியலை
மாற்றிடுவோம்
சத்திய அரசியலாக..

படைப்போம்
"புதியதோர் பாரதம்"

Wednesday, 3 October 2012

அழகு


அழகு

செதுக்கிய
சிலையாய்...
சிவப்பு நிற
உடையில் நீ...
அழகு..

மிரள வைக்கும்..
மென்மையான
மகாராணியின்...
நடையில் நீ...
அழகு....

முட்களாய்
தோழிகள் சூழ...
அதிசய
ரோஜாவாய் நீ...
அழகு...

என்னை
காணதுடிக்கும்
கண்களை
கட்டும்
களவாணியாய் நீ...
அழகு..

அத்தனை அழகிற்க்கும்
அடிமைகள் ஆயிரம்.....
அதில்,
என்றும் எனக்கே
முதலிடம்...

Friday, 14 September 2012

மழை

ரோஜா இதழினில்
மழைத்துளி..!
பட்டும் படாமல்
மிதக்கிறது...
கண்களின் எதிரே...!

"மழையினில்
நனைந்தபடி
என்னவள்....!"

Tuesday, 11 September 2012

என் காதல்

          என் காதல்

காதலிக்க ஆசைதான்..!
பெண்ணே
உன் போல்
அழகியை
காதலிக்க ஆசைதான்...!

"அழகிய கண்கள்,
அதிசய இதழ்கள்,
ஒளிரும் மேனி,
ஓடும் கால்கள்,
உதிறும் சிரிப்புகள்,
உறைய வைக்கும் பேச்சுக்கள்",
அத்தனையும்...!
காதலிக்க ஆசைதான்
பெண்ணே...?

ஆயினும்
மறந்துவிடு என
மணி அடிக்கிறது
மல்லிகையே
உன் உயர் ஜாதி....!
        
                 -மு.துரை பாண்டியன்

Wednesday, 15 August 2012

சுதந்திர தினவிழா


முந்நூறு
ஆண்டுகள்
போராடி பெற்ற
சுதந்திர தின நாள்..!
மிட்டாய்
வாங்கும்
நாளாக...
"ஏழைகளின்
காலண்டரில்"....?

Monday, 30 July 2012

கவிதை


எழுதிவிடலாம்..
அன்பே,
உந்தன் முக
பாவனைகளை
வைத்து...

ஒரு புத்தகமே..!!!

ஹைக்கூ
கவிதைகளாக..!!!


கவிதை


முகவரி
இல்லாத கடிதமாய்
காத்துகிடக்கின்றன...
அன்பே,
நான் உன்னோடு
பேச நினைத்த
கனவு மொழிகள்.....
கவிதைகளாக....!!!
என் செல் போனில்....

Saturday, 28 July 2012

கவிதை


ஓராயிரம் 
ரோஜாக்கள் கூட
ஈடாகாது...!!!
அன்பே...
என்
உயிர் திருடும்
உந்தன்
அந்த
ஒரு நொடி
பார்வைகளுக்கு....

Friday, 27 July 2012

கவிதை

வீசும்
புழுதிப் புயல் கூட...
பூவாசமாய்
நெஞ்சை வருடுகிறது!!!...
பெண் பூவே
உன் நினைவுகளால்.....

கவிதை


கடும்
கொசுக் கடியிலும்
கண் உரங்க
துடிக்கிறேன்....
கவிதையே
கனவில்
நீ வருவாயென.....

Thursday, 12 July 2012

விக்கல்

யாரோ
நினைப்பதால்தான்
விக்கல் என்றால்..?
அன்பே நீ.....
எப்பொழுதுமே
விக்கலுடன் தான்
இருக்க வேண்டும்
இப்படிக்கு
முப்பொழுதும்
உன் கற்பனையில்
நான்
"M.DHURAI"

Saturday, 28 April 2012

தமிழ் கவிதை

மார்பெங்கும்
வண்ண மலர்
வைத்து மறைத்தாலும்

மங்கை உந்தன்
அழகிற்கு
 ஈடாகவில்லை

"அந்த மலைகளின் அரசி"

தமிழ் கவிதை

அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்

Wednesday, 18 April 2012

தமிழ் ஈழம்

           தமிழ் ஈழம்


சூரிய வெப்பத்தால்
பனி உருகி
கடல் நீர்
அதிகரிக்கிறது
 -அறிஞர்கள் சொன்னார்கள்

அடக் கொடுமையே...! 
எனக்குத்தானே
தெரியும்  அது
என்னவர்கள் விட்ட
கண்ணீர் என்று....

-"வருத்ததுடன் தமிழ் ஈழம்"

Thursday, 5 April 2012

தமிழ் கவிதை

மழையில்,

எங்கே
குடை பிடிப்பது 
என தெரியாமல் 
தவிக்கிறேன்....

அவசரப்பட்டு 
சுவர் முழுவதும்
எழுதியதால்....

-"என்னவள் பெயரினை"

by 
dinesh raj

Wednesday, 4 April 2012

தமிழ் கவிதை

தினந்தோரும்
ஆயிரம் பொய்
சொல்லும்
என் இதழ்கள்

இரு வரிகள்
பேச மறுக்கிறது

என்னவள்
கண்களை நோக்கி..!!

by 
dinesh raj

தமிழ் கவிதை

கடண்
 வங்கியவனை
போல
தவிக்கிறேன்

என்னவள்
கண்களில்
படும்
போதெல்லாம்

by 
dinesh raj

தமிழ் கவிதை

காதலை சொல்ல
 துணிந்து வந்த
என் கால்கள்
     திரும்பின

அன்பே
உன் கண்களை
 பார்க்க முடியாமல்!!!

by
dinesh raj

Monday, 2 April 2012

தமிழ் கவிதை

ஆயிரம் மலர்கள்
அணி வகுக்கின்றன
ராஜ மரணத்தை
அடைய
-"தினந்தோரும் 
என்னவள் வாசலில்"

Thursday, 22 March 2012

தமிழ் கவிதை

ஒவ்வொரு முறை தோற்க்கும்
போதும் உன் வாழ்நாள்
அதிகரிக்கிறது

-"சாலை பயணங்களில்".

Sunday, 11 March 2012

நுகர்வோர் பாதுகாப்பு


                 நுகர்வோர் பாதுகாப்பு

மனிதா! மனிதா!
     விழித்துவிடு – உன் 
மனதிற்க்கு இதனை
          உணர்த்திவிடு

Wednesday, 15 February 2012

தமிழ் கவிதைகள்

                                                                                                                                                                                                                                                                                                  சாதி வெறி

காலங்கள் ஓட ஓட
கயவனும்
குயவனாய்
மாறுகின்றான்

தாயின் கருவறையில்
துவங்கி
அவன் கல்லரையிலும்
முடிவதில்லையே
இந்த சாதி………..




சாதி என்பது

சமுதாயத்தின்
எதிரி !
சமச்சீரின்
அழிவு !

வளருகின்ற
இளைஞனின்
நெஞ்சை முறிக்கும்
 சாதி?

வகுப்பரையிலும்
நுழைந்து பலரை
வருந்த வைப்பது
 ஏனோ?

மலர் வாங்க
போனாலும்
சாதி மல்லி
வேண்டும்

மனம் முடிக்க
போனாலும்
சாதிப்பெண்
வேண்டும்


சாதி சாதி
என
கவி பாடும்
மனிதா !

உன் உள்ளத்தில்
சாதி வெறி
ஒழிய?

எங்கள்
  உயிர்தான்
மருந்தென்றால்?

உடனே வா
உன்னால்
முடிந்த உயிரைக்
குடி!

ஏனென்றால் ?
    ஒரு கோடி
     ஏழைகள்
     நாங்கள்!


தமிழ் கவிதை

ஆயிரக்கணக்கில் திரிந்தேன்
               அடித்து விரட்டினாய்!
அனாதையாய் திரிகிறேன்
               அதிசயம் என்கிறாய்!
              
                         -சிட்டுக்குருவி