Wednesday, 26 July 2017

தாகம்!

மழை நனைத்த உனக்காய்
ஒர் கவிதை,
எழுதி,
மறைக்க முடியாமல்,
நானும்,
நனைந்த உன்னைபோலவே!

தாகம்!

மழை நனைந்த நீ
மனம் தொலைத்த நான்,
மறைக்க முடியாமல்,
நீயும் நானும்

மழை!

அடடா மழையென்று,
அதிர்ச்சியில் கூட
கை நீட்டிவிடாதே,
கொஞ்சம் பொறு,
எங்கள் ஊரிலும்
ஏதோ பெய்துவிட்டு வரட்டும்!.
இந்த மழை!!

மழை!

மழை,
நனைவதாயிருந்தால்,
முன்னதாய் சொல்லிவிடு,
நிலவில் மழை!
ஆராய வேண்டும் நான்!

காதல்

காதல்
குழந்தைகளின் விளையாட்டு பொருள்,
ஒளித்து வைக்கலாம்,
இருந்தும்
வெளிவந்துவிடும்!!

ஏக்கம்

உன் காதோரத்தில்
ஓர் வியர்வை துளி
மெல்ல மெல்ல வழிந்து
உன் கழுத்தை
கடநதபோது
காணமல் போயிற்று
என் பெருமூச்சுக்காற்றில்

சொர்க்கம்

கோப்பை தேநீர்
கொஞ்சம் மழை
ஒதுங்கி நிற்க மரம்
உரசி நிற்க நீ
எதற்கு வேண்டும்
இனியும் சொர்க்கம்!