எத்தனை எத்தனை பிரிவுகள்
மானிடத்தில்
என்றென்னி
என்னை பிரித்திட நினைத்தேன்
அதிலிருந்து
ஏனோ என்னையும் ஒரு பிரிவாக்கி
எதிர்க்க தொடங்கின
எல்லா பிரிவுகளுமே..
அவள் உச்சந்தலையில் விழுந்து
ஓயாது உடலில் ஓடி
ஒவ்வொரு இடமாய் தொட்டு
வளைவில் வளைந்து
சுழியில் நெழிந்து
மேட்டிலே ஏறி
பள்ளத்தில் இறங்கி
மலரடியில் விழும்போது
மழைத்துளிகள் கூறின
கடல் நீர் எங்கள்
காதலின் கண்ணீரே என..
பூமித்தாய் அவளிடம்..!