துளித்துளியாய்
மழை
விழுவதெல்லாம்,
மெதுமெதுவாய்
உன்மேல்
பயணிக்கத்தான்!
Saturday, 16 September 2017
மழையின் காமம்
அவளுக்காக!
தோட்டக் காவலர்களுக்கு
தெரியாமல்,
சுற்றிலும் நோட்டமிட்டு,
ரோசாவை,
வெடுக்கென பறிப்பதைகாட்டிலும்,
ரசிப்பது கடிணமாய்!!
இங்கே!!
அப்பாவுடன் அவள்!
ஈர்ப்பு விசை
என் ஈர்ப்பு விசையிலிருந்து,
மெது மெதுவாய் நழுவி,
வெளியேறிய என் நிலவு,
வேறு கிரகமோ!
வெறும் கல்லோ!!.
நெற்றிபொட்டு
நெல்மணி போன்ற,
உன் சிறிய நெற்றிப்பொட்டால்,
எத்தனை முறைதான்
விதைப்பாய்,
என்னுள் காதலை!!.
நினைவுகள்
என்,
நினைவு அலைகளால்,
அழிக்க முடியாத காலடித்தடம்,
நீ!!.
நகரத்து மழை
பகல் வேண்டாம்,
இரவோடு வா மழையே!,
அப்போதேனும்,
வசை நிறுத்தட்டும்,
மழை பிடிக்காத,
இந்த நகரத்து மக்கள்.
Subscribe to:
Posts (Atom)