மெது மெதுவாய்
நிறைந்துவரும்
என் கவிதைகளின் அணை,
என்றேனும் ஓர் நாள்
உடையக்கூடும்,
அது நள்ளிரவாகவோ,
நன்பகலாகவோ இருக்கலாம்,
காதல் வைத்திருப்போர்
அதில் ஏறி
காணாமல் போய்விடுங்கள்,
காதல் இல்லாதோர்,
கண்களை மூடி குதியுங்கள்,
என் கவிதை,
கரை சேர்க்குமோ
கடல் சேர்க்குமோ
தெரியாது,
நிசமாய் காதல் சேர்க்கும்.
Tuesday, 14 March 2017
கவிதை அணை
Sunday, 12 March 2017
குலசேகரம்
குலசேகரம்
“டேய், என்னடா மொறைக்குர, அடிச்சு பல்லுகில்லு
எல்லா உடைக்க போறன் பாரு” கேட்டதும் திகைத்து போய் நின்றான் பாண்டி.
நாகர்கோவிலுக்கு மேற்கே திருவனந்த்புரம் போற
பாதையிலதான் இருக்கு இந்த குலசேகரம், ஏதோ ஏரிய பேருந்து நிலையமா மாத்துனது மாதிரி
குழிக்குள்ளதான் இருக்கு அந்த ஊரோட பெருந்து நிலையம், பெரிய ஊருங்கிறதால எப்பவுமே
கொஞ்சம் கூட்டமாவும் நிறைய சத்தமாவும் இருக்கும், கீழ இருந்து மெதுவா ஏறி,
பெருந்து நிலையத்தோட வாசல்ல வந்து பேருந்திற்காய் காத்து கொண்டிருந்தான் பாண்டி, பெருந்து
எப்ப வரும் என்று அருகில் இருப்பவரிடம் கேட்க, அவரோ மலையாலத்தில் கொஞ்சுண்டு தமிழ்
சேர்த்து ஏதோ சொன்னார், ஆனால் புரியும்படிதான் இருந்த்து, அப்பொழுது, தூரத்தில்
ஒரு மாற்றுதிறனாளி தனது இரு செயற்கை கால்களை கைகளால் ஊன்றி ஏதொ உளரியபடி நடந்து
வந்தார், சிறிது தூரம் வந்தவர் எல்லோரிடமும் காசு கேட்டு வாங்கிகொண்டிருந்தார்,
பாண்டி அவன் பையில் கைவிட்டு சில்லரைகளை எடுத்து அவரை பார்த்தபடி நின்றிருந்தான்,
அவனருகில் வந்ததும் அவர், முகத்தில் இருந்த சிரிப்பை கிழித்து எறிந்துவிட்டு
கோபத்தை ஒட்டிக்கொண்டவராய், டேய் என்னடா மொறைக்குர அடிச்சு பல்லுகில்லு எல்லா
உடைக்க போறன் பாரு என்று அவனை நோக்கி கத்தினார், ஒரு நிமிடம் மிரண்டு போய் அவரையே
பார்த்தான் பாண்டி, மெதுவாய் அவர் கோப முகத்தை மாற்றி நக்கலாய் சிரிக்க
ஆரம்பித்தார், சத்தமாய் சிரித்துவிட்டு பயந்துட்டியா என சிரித்தபடி அங்கிருந்து
மெதுவாய் நகர்ந்தார்.
Subscribe to:
Posts (Atom)