Sunday, 30 August 2015

பூமித்தாய்

அவள் உச்சந்தலையில் விழுந்து
ஓயாது உடலில் ஓடி
ஒவ்வொரு இடமாய் தொட்டு
வளைவில் வளைந்து
சுழியில் நெழிந்து
மேட்டிலே ஏறி
பள்ளத்தில் இறங்கி
மலரடியில் விழும்போது
மழைத்துளிகள் கூறின
கடல் நீர் எங்கள்
காதலின் கண்ணீரே என..
பூமித்தாய் அவளிடம்..!

No comments:

Post a Comment