மெது மெதுவாய்
நிறைந்துவரும்
என் கவிதைகளின் அணை,
என்றேனும் ஓர் நாள்
உடையக்கூடும்,
அது நள்ளிரவாகவோ,
நன்பகலாகவோ இருக்கலாம்,
காதல் வைத்திருப்போர்
அதில் ஏறி
காணாமல் போய்விடுங்கள்,
காதல் இல்லாதோர்,
கண்களை மூடி குதியுங்கள்,
என் கவிதை,
கரை சேர்க்குமோ
கடல் சேர்க்குமோ
தெரியாது,
நிசமாய் காதல் சேர்க்கும்.
No comments:
Post a Comment