சாதி வெறி
சாதி என்பது
காலங்கள் ஓட ஓட
கயவனும்
குயவனாய்
மாறுகின்றான்
தாயின் கருவறையில்
துவங்கி
அவன் கல்லரையிலும்
முடிவதில்லையே
இந்த சாதி………..
சாதி என்பது
சமுதாயத்தின்
எதிரி !
சமச்சீரின்
அழிவு !
வளருகின்ற
இளைஞனின்
நெஞ்சை முறிக்கும்
சாதி?
சாதி?
வகுப்பரையிலும்
நுழைந்து பலரை
வருந்த வைப்பது
ஏனோ?
மலர் வாங்க
போனாலும்
சாதி மல்லி
வேண்டும்
மனம் முடிக்க
போனாலும்
சாதிப்பெண்
வேண்டும்
சாதி சாதி
என
கவி பாடும்
மனிதா !
உன் உள்ளத்தில்
சாதி வெறி
ஒழிய?
எங்கள்
உயிர்தான்
மருந்தென்றால்?
உடனே வா
உன்னால்
முடிந்த உயிரைக்
குடி!
ஏனென்றால் ?
ஒரு கோடி
ஏழைகள்
நாங்கள்!
No comments:
Post a Comment