Monday, 27 October 2014

உன் வாசனை

கார்மேகம் புடை சூழும்,
கடற்கரையாய் காற்றடிக்கும்,
மரங்கள் மகிழ்ச்சியாய் ஆடும்,
பறவைகள் பறந்து பாடும்,
மலர்கள் மழையென பொழியும்,
மழைத்துளி மலரென  தூவும்,
இடையில் ஓர் வாசனை,
என் உயிரை குடிக்கும்,
ஆம்,
இது  மண்வாசனை அல்ல..!
உன் வாசனைதான்..!

No comments:

Post a Comment