Friday, 10 October 2014

"எனது இரவுகள்"

நட்ட நடு இரவில்
விழித்து கொள்கிறேன்,
எழுந்து, எவரும் அறியாமல்
வெளிவருகிறேன்,

ஆடை துவைக்கும் கல்லில்
அமைதியாய் அமர்கிறேன்,

முதல் உன் நினைவுடன்
உறவாடுகிறேன்,
பின் நிலவுடன்
உறையாடுகிறேன்,

பின்
நிலா, நீ, நான் என
நிமிடங்களை நகர்த்துகிறேன்,

அந்த நிலவொளியில் நான்,
நினைவிழந்தவனாய்,
நிறைய சிரிப்புகளுடன்..!

அடுத்த வீட்டுக்காரனோ அதிர்ச்சியில்..!
அரைகிறுக்கனோ என..?

நிலவுக்கு சில நாட்கள்
விடுப்பு உண்டு,
உன் நினைவுக்கோ..!
ஓர் நாளும் இல்லை,

இப்படியாய் எனது இரவுகள்,
தனிமையை சாகடித்து,
தன்னை சாந்தபடுத்தி கொள்கின்றன..

                                         - மு.துரை


No comments:

Post a Comment